guru peyarchi 2013

மேஷம்
உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான யோக ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்க உள்ளார். இது வரை நீங்கள் அனுபவித்து வந்த பணக்கஷ்டம். கொடுக்கல்வாங்கல் பிரச்னைகள் தீரும். இந்த ராசிக்கு குரு பலம் வந்துள்ளதால் திருமண வயது வந்து திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும்.புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த குறை நீங்கும். தொழில்,வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமானபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் ஆகியவை கிடைக்கும். வீடு வாங்குவது, புதிதாக கட்டுவது அல்லது பழையவீட்டை புதுப்பிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த டென்ஷன் நீங்கி மகிழ்ச்சி கூடும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணங்கள் சேரும். சனி, ராகு, கேது சஞ்சாரம் நற்பலன்களை கொடுக்கும் சூழலில் இல்லை ஆதலால் அவற்றுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வருவதுடன், ஞாயிற்றுக்கிழமை ராகு, கேது வை நெய் தீபம் ஏற்றி வணங்குவது நல்லது.


 
 
ரிஷபம்
உங்கள் ஜென்மராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் அவர் ஜென்ம குருவாகிறார். இதனால் உங்களுக்கு நன்மைகள் குறையலாம். ஆனால் குரு பார்வை நற்பலன்களைத் தரும். நீண்ட தூரப்பயணம் அதனால் வீண் அலைச்சல், எடுத்த காரியத்தை செயது முடிப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில்,வீயாபாரத்தில் போட்டி, பாக்கி வசூலில் தாமதம் ஏற்படலாம். உடல் சோர்வு வரக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற இடமாற்றம் வரக்கூடும். பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரவு இருக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்னைகள் குறையும் பாதியில் விட்ட பணிகளை செய்துமுடிப்பீர்கள். தந்தையின் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கலவியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசியல்வாதிகள் நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது. அடுத்தவர்களுக்கு ஜாமீன் தருவதை தவிர்ப்பது நல்லது. சனி பகவான் சஞ்சாரம் சாதகமான பலன் தரும் நிலையி்ல் உள்ளது. ஆனால் ராகு, கேது நற்பலன் தரக்கூடிய நிலையில் இல்லை. அதனால் அவற்றுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நற்பலன் தரும். ஞாயிற்றுக்கிழமையில் வினாயகரையும், துர்க்கையையும் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் கூடும்.


மிதுனம்
உங்கள் ராசிக்கு 12-ல் விரைய குருவாக சஞ்சாரம் செய்கிறார் குருபகவான். இதனால் சுபச்செலவுகல் உங்களைத்தேடி வரும். வீடு, வாகனம் வாங்குதல் பிள்ளைகள் திருமணம் போன்ற செலவுகளை எதிர்பார்க்கலாம். தொழில், வியாபாரத்தில் கவனமாக ஈடுபடுவது நல்லது. கடன் பெறவேண்டி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் உண்டாகும். வியாபாரத் தொடர்பான பயணங்கள் வீண் அலைச்சலைத் தரும். வழக்கு விவகாரங்களில் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டு பயணங்களும் செல்ல நேரலாம். பெண்கள் வீண் செலவு வராமல் கவனமாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆடை ஆபரணம் வாங்குவதால் செலவு கூடும். மணவர்களின் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அதிக கவனம் செலுத்தி படிப்பது அவசியம். அரசியலில் இருப்பவர்கள் தங்களது செல்வாக்கு குறையாமல் கவனமாக செயல்படுவது நல்லது. கட்சி பணிகளுக்காக செலவு செய்ய நேரலாம். சனி பகவான் சஞ்சாரம் நற்பளன் தரும் நிலையில் இல்லை. ராகு,கேது நன்மை செய்வார்கள். 

பரிகாரம்: ஆலங்குடிக்கு சென்று குரு பகவானை வழிபடுவதுடன் வியாழக்கிழமையில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குவதும் நல்லது. சனி காயத்திரி நன்மை தரும்.

கடகம்
உங்கள் ராசிக்கு 11-ல் லாப குருவாக சஞ்சாரம் செய்யும் குரு பகவான் உங்களுக்கு பல வகையிலும் லாபம் தருவார். இதுவரை தொழில், வியாபரத்தில் இருந்த தடைகள் நீங்கி வளர்ச்சி பெறும். பாக்கி வசூல் திருப்தி தரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். காரிய தாமதங்கள் நீங்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளால் நற்பலன்கள் கிடைக்கும். சம்பள பாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, புதிய வேலையில் சேருவது ஆகியவை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் நன்மைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். திருமணமும் நடக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண பொருள்சேர்க்கை உண்டாகும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். சனி, ராகு,கேது சஞ்சாரம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும், வீடு, வாகனம் தொடர்பான செலவுகளை ஏற்படுத்தக்கூடும். பயணங்களின் போது கவனம் தேவை. 

பரிகாரம்: புதன் கிழமை புதன் பகவானை நெய் தீபம் ஏற்றி வணங்குவதும், சனி பகவானை வழிபடுவதும் காரிய அனுகூலங்களைத்தரும்.


சிம்மம்
உங்கள் ராசிக்கு 10-ல் பதவிக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரு பகவான் சஞ்சாரம் உள்ளது. கோட்சார ரீதியாக குரு 10-ம் இடத்துக்கு வருவது தொழில், வியாபரத்தில் முன்னேற்றத்தை தடைசெய்யும், உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். எனவே புதிய தொழில், வியாபாரம் தொடங்குவது, புதிய வேலையில் சேருவது ஆகியவற்றை தள்ளிப்போடுவது நன்மை தரும். மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆனால் குருபார்வை உங்கள் ராசிக்கு 2,4,6-ம் இடங்கள் மீது பதிவதால் பண வரத்து சீராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும் சாமர்த்தியமான பேச்சு அனுகூலமான பலன் தரும். அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பது, ஜாமீன் தருவதை தவிர்ப்பது ,வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நல்லது. பிறரது உதவியை எதிர்பார்க்கவேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். பெண்கள் கூடுதலான செலவுகளை எதிர்பார்க்கலாம். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. சிலருக்கு பொறுப்புகளில் மாற்றம் வரலாம். சனி, சஞ்சாரம் நன்மைதரும். ராகு, கேது சஞ்சாரம் வாகனம் தொடர்பான செலவைத் தரும்.

கன்னி
உங்கள் ராசிக்கு 9-ல் பாக்கியம் தரும் விதத்தில் குரு பகவானின் சஞ்சாரம் இருப்பதால் பொருள் சேர்க்கை உண்டாகும். இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் இருந்து காரிய தடைகளை உருவாக்கிய குரு இனி காரிய வெற்றியை தருவார். குருவின்பார்வை உங்கள் ராசி, 3 , 5 –ம் இடங்களில் பதிவதால் ஆரோக்கியம் மேம்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஏற்கெனவே பாதியில் விட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பப் பிரச்னைகள் தீரும். மகிழ்சேசி கூடும். தொவில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பாக்கிவசூல் திருப்தி இருக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பளஉயர்வு கிடைக்கலாம். ஆன்மீக பயணம் செல்ல நேரிடும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வெளிநாடு செல்லும் எண்ணம் கைகூடும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும். சனி, ராகு கேது சஞ்சாரம் பணவரத்தில் தாமதத்தை தரலாம். வாக்குறுதிகள் கொடுப்பதில் கவனம் தேவை.

பரிகாரம்: சனிக்கிழமை சனி, பகவானை வணங்குவதுடன், பெருமாளை வழிபட சகல நன்மைகளும் உண்டாகும்.


 
 
துலாம்
உங்கள் ராசிக்கு 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சாரம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கை அவசியம். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குரு பகவானின் பார்வை 12,2,4 –ம் இடங்களில் பதிவதால் வீண் செலவு குறையும். பயணங்களால் ஏற்படும் அலைச்சல் குறையும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் அமைதி கிடைக்கும். இதமான பேச்சினால் காரியஅனுகூலம் கிடைக்கும். வீடு,வாகனம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டாலும் அது கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்கவும். புதிய தொழில் தொடங்குவதை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். விருப்பமில்லா இடமாற்றம் எதிர்பார்க்கலாம். தொழில் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரலாம். வழக்கு விவகரங்களில் ஈடுபடாமல் ஒதுங்கி விடுவது நல்லது. எதிர்ப்புகள் வராமல் கவனமாக செயல்படுவது நல்லது. பெண்கள் பொறுமையாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அலட்சியம் காண்பிக்காமல் கவனமாக படிப்பது அவசியம். அரசியலில் இருப்பவர்கள் எந்த கருத்துகளையும் கூறாமல் தலைமையை அனுசரித்து நடப்பது நன்மை தரும். சனி, ராகு கேது சஞ்சாரம் சாதகமாக இல்லாததால் எதிலும் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: சனிக்கிழமை சனி பகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது, வியாழக்கிழமை குருபகவானை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது, ஞாயிற்றுக்கிழமையில் ராகு, கேது வை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம்.

விருச்சிகம்
உங்கள் ராசிக்கு 7-ல் குரு கூட்டுறவில் வெற்றிதரும் குருவாக சஞ்சாரம் செய்வதால் அடுத்தவர் மூலம் உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசி மீது குரு பார்வை பதிவதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். தெளிவான மன நிலை காணப்படும். 3,11 ம் இடத்தையும் குருரபார்ப்பதால் லாபம் கூடும். தைரியம் கூடும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாக்கி வசூல் திருப்தி தரும். புதிய தொழில் வியாபாரம் தொடங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர், மேலதிகாரிகளின் ஒ்ததுழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடிவரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.திருமண முயற்சிகள் கைகூடும். மன வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரக்கூடும். நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வழ்ககுகளில் சாதகமான நிலை காணப்படும். முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவுடன் சிறப்பாக தங்களது பணிகளை செய்து முடிப்பார்கள். மாணவர்களுகக்கு கல்வியில் இருந்த தொய்வு நீங்கி சுறுசுறுப்பாக படிப்பார்கள். அரசியலில் இருப்பவர்கள் மக்கள் செல்வாக்கு பெறுவார்கள். புகழ்கூடும். சனி, ராகு,கேது சஞ்சாரம் வீண் செலவு, டென்ஷன் ஏற்படுத்தக்கூடும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானையும் ஞாயிற்றுக்கிழமை ராகு,கேதுவையும் வணங்கி வர கஷ்டங்கள் குறையும்.

தனுசு
உங்கள் ராசி நாதனான குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தான குருவாக சஞ்சரிக்கிறார். தடைகளை தாண்டி காரியங்களை சாதிக்க வேண்டிவரும். திட்டமிட்டதற்கு மாறாக பணிகள் நடக்ககூடும். தொழில் வியாபாத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டிவரும். பாக்கி வசூலுக்காக அலைச்சல் இருக்கும்.. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உத்தயோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உய்ரவு தாமதமாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவு வரலாம். குடும்பத்தினருடன் வாக்கு வாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது. குரு பகவானின் பார்வை 2,10,12 –ம் இடங்களின் மீது பதிவதால் நீங்கள் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரக்கூடும். வாக்குறுதிகளை பாடுபட்டு காப்பாற்றுவீர்கள். வீண் செலவை கட்டு்ப்படுத்த எடுக்கும் முயற்சி நல்ல பலன் தரும். தேவையற்ற பயணம் செல்வது குறையும். வீடு, வாகனம் வாங்குவது, புதுப்பிப்பது ஆகியவற்றில் கவனம் தேவை. வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் செலவை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் அவசியம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். சக மாணவர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. ஆசிரியர் ஆலோசனை வெற்றி்க்கு வழி தரும். அரசியலில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்காமல் இருப்பது நன்மை தரும். சனி, ராகு,கேதுவால் நல்ல பலனே கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் குருர பகவானை கொண்டக்கடலை மாலை சாற்றியும், முல்லை மலர் சாற்றியும் வழிபடுவது வெற்றியை தரும்.

மகரம்
உங்கள் ராசிக்கு 5-ல் அதிர்ஷ்டம் தரும் குருவாக சஞ்சாரம் செய்கிறார் குருபகவான். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானம் என்று கூறப்படும் இந்த இட குரு, உங்கள் ராசியை பார்ப்பதுடன் 9,11-ம் இடங்களையும் பார்வையிடுகிறார். இதனால் பாக்கியங்கள் கூடும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பாக்கி வசூல் வேகம் பிடிக்கும். அதிர்ஷ்ட வாப்புகள் தேடிவரக்கூடும். ஏற்கெனவே தொடங்கி பாதியில் விட்ட பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு வரும். மதிப்பு மரியாதைகள் கூடும். புதிய தொடர்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். வீடு, வாகனம் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். உயர்கல்வி கற்க முற்படுவீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். செல்வாக்கு உயரும். சனி, ராகு,கேது சஞ்சாரம் பாதி்பபு ஏற்படு்ததும் நிலையில் இல்லை. ஆனால் எந்த ஒரு வேலையையும் செய்து முடிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

பரிகாரம்: சனிக்கிழமை சனி பகவானையும், ஞாயிற்றுக்கிழமை ராகு கேதுவை வணங்கி வருவதுடன் மகான்களை சந்தி்தது ஆசி பெறுவதும் முன்னேற்றத்தை தரும்.

கும்பம் 
உங்கள் ராசிக்கு சுகஸ்த்தான குருவாக ராசிக்கு 4-ல் குரு பகவான் சஞ்சாரம் உள்ளது. இதனால் வீடு வாங்குவது, புதுப்பிப்பது, வாகனம் வாங்குவது ஆகியவை திட்டமிட்டபடி நடக்காமல் கால தாமதம் ஆகலாம். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8,10,12-ம் இடங்களின் மீது பதிவதால் பணத் தட்டுப்பாடு நீங்கும். வழக்கு விவகாரங்களில் இருந்த தொய்வு நீங்கி முடிவு கிடைக்ககூடும். கடன் பிரச்னைகளால உண்டான தொல்லைகள் குறையும். தொழில், வியாபராத்தில் வளர்ச்சி காண எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வீண் செலவு குறையும். அலைச்சல் இருந்தாலும் பயணங்களால் நன்மை உண்டாகும். இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். மனக்கவலைகள் குறயும். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காணப்படும். போட்டி பந்தயங்களில் ஈடுபடாமல் கவனமாக செயல்படுவது அவசியம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது மூலம் அவப்பெயர் வராமல் தடுக்கலாம். குடும்பத்தில் தாயாருடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு வேலைபளு இருக்ககூடும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. அரசியலில் இருப்பவர்கள் தலைமையின் கருத்துக்களை கேட்டு நடப்பது நல்லது. சனி, ராகு, கேது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நன்மைகள் கூடும்.

பரிகாரம்: குருபகவானின் ஸ்தலமான ஆலங்குடிக்கு சென்று வணங்கி வருவதும், ஏழை பெரியவர்களுக்கு உதவுவதும் நல்லது.


மீனம்
உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தான குருவாக ராசிக்கு 3-ல் சஞ்சாரம் செய்யும் உங்கள் ராசி நாதன் குரு அதிக பாதிப்பை தரமாட்டார். ஆனால் எதிபாராத இடமாற்றம், அலைச்சல், பணவரத்தில் தாமதம் ஏற்படும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் உண்டாகலாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்னைகள் வரமல் தடுக்கலாம். தொழில் வியாபாரத்தில் அதிக அக்கறை காண்பிக்கவேண்டி இருக்கும். புதிய தொழில் தொடங்குவதை தள்ளி போடுவது நல்லது. பாக்கி வசூல் தாமதப்படக்கூடும். வியாபார போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகலாம். அடுத்தவர் மூலம் ஏமாற்றங்கள் வரலாம் எனவே எதையும் கவனமாக செய்வது நல்லது. சின்ன காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க அதிக முயற்சி மெற்கொள்ள வேண்டி வரும். திருமணம் ெதாடர்பான பே்சசு வார்த்தையில் மெத்தனப்போக்கு காணப்படலாம். பெண்கள் தங்களது பணிகளில் கூடுதல் கனம் செலு்ததுவது நல்லது. பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் படிப்பில் அலட்சியம் காட்டாமல் அதிக அக்கறையுடன் படிப்பது அவசியம். அரசியலில் இருப்பவர்கள் தாங்கள் உண்டு தங்கள் பணி உண்டு என்று இருப்பது நன்மை தரும். சனி, ராகு, கேது சஞ்சாரம் சாதகமான நிலையில் இல்லை. காரிய தடை தாமதங்களை ஏற்படுத்தும்.

பரிகாரம்: திருநள்ளாறு சனி பகவானையும், திட்டை குரு பகவானையும் திரு நாகேஸ்வரம் ராகு பகவானையும், கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் வணங்கி வருவது வாழ்க்கை வளம் பெற உதவும்.

Comments

  1. The Sands Casino® | Sydney, NSW - Secure online gaming
    The Sands Casino® is 카지노 one of 1xbet korean the world's leading operators of casino gaming technology. The casino was established in 2000 and has been established since 샌즈카지노 2001

    ReplyDelete

Post a Comment

Popular Posts